தமிழ்நாடு

tamil nadu

அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நேபாள பிரதமர்: காரணம் என்ன?

By

Published : Jul 2, 2020, 7:00 AM IST

காத்மாண்டு: ஆளும் கட்சித் தலைவர்கள் ராஜினாமாவிற்கு அழைப்பு விடுத்ததையடுத்து, நேபாள பிரதமர் ஒலி, அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நேபாள பிரதமர்: காரணம் என்ன?
அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நேபாள பிரதமர்: காரணம் என்ன?

இந்தியாவைப் பற்றி நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி விமர்சித்தது அரசியல் ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் முறையல்ல. இரு நாட்டு உறவை மோசமாக்கும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டு கூறிய அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்.

இந்தக் குரல் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கூட்டத்திலும் ஒலித்தது. கூட்டத்தின் போது அந்நாட்டின் பிரதமர் ஒலி இந்தியா மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதற்கு மற்ற தலைவர்களான புஷ்ப கமல் தகல், மாதவ் குமார் நேபாள், ஜால்நாத் கானல், பாம்தேவ் கவுதம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்தியா மீதான் ஐந்த குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்றால், பதவி விலக வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர். இது குறித்து ஜால்நாத் கானல் கூறுகையில், “ஒலி கம்யூனிஸ்ட் கொள்கையை கடைப்பிடிக்க தவறிவிட்டதாகவும், அறிவித்த திட்டங்களை மறந்துவிட்டார்” எனவும் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க...அவசர காலம், காங்கிரஸின் சுயநல அரசியலை நினைவுப்படுத்துகிறது- பாஜக ராம் மாதவ்!

ABOUT THE AUTHOR

...view details