அர்மேனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து போர் நடைபெற்று வருகிறது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பகுதிகளான இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதி தொடர்பாக 1994ஆம் ஆண்டு முதல் கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது.
சர்ச்சைக்குரிய பிராந்தியமான நகோர்னோ-காாராபக் பகுதியில் இரு நாடுகளும் கடுமையாக சண்டையிட்டு வந்தன. இந்த மோதலில் அசர்பைஜான் நாட்டிற்கு அண்டை நாடான துருக்கி ஆதரவுக் கரத்தை நீட்டி ராணுவ உதவிகளையும் மேற்கொண்டது.
முன்னதாக ரஷ்யா இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தியது. இதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தபோதிலும் தொடர்ந்து அவை தாக்குதல் நடத்தி வந்தன.