மியான்மரில் பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக, அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்டோரை ராணுவம் சிறைப்பிடித்து வைத்துள்ளது. மேலும் அங்கு உரிய அனுமதியின்றி விமானங்களை இயக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில், இணைய சேவைகள் முடக்கப்பட்டுவருகின்றன.
ராணுவத்தினரின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு உலகம் முழுக்க கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது, ராணுவத்தினர் தடியடி நடத்திவருகின்றனர். கடந்த பிப். 28 மக்களின் உரிமை போராட்டத்தை ராணுவத்தினர் அடக்க முயன்றதால், அப்பகுதியே போர்க்களமாக மாறியது. அதில், 18 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.