சீனாவின் வூஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று தற்போது 195-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது. இந்தத் தீநுண்மி தொற்று காரணமாக இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கோவிட்-19 தொற்று காரணமாகப் பெண்களைவிட ஆண்களே அதிகம் உயிரிழப்பார்கள் என்ற அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. சீனாவின் பெய்ஜிங் டோங்ரென் மருத்துவமனையைச் சேர்ந்த ஜின்-குய் யாங் உள்ளிட்ட சிலர் தாங்கள் சிகிச்சையளித்த 43 பேர் உள்பட 1056 பேரின் தரவுகளை ஆய்வுசெய்துள்ளனர்.
கோவிட்-19 தொற்றையும் 2003ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட சார்ஸ் தொற்றையும் கரோனா என்ற ஒரே தீநுண்மிதான் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சார்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 524 பேரின் தரவுகளையும் ஆய்விற்குள்படுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து ஜின்-குய் யாங் கூறுகையில், "ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஆண்கள் அதிக அளவில் தீநுண்மி தொற்றால் உயிரிழப்பதைக் கவனித்தோம். இதனால் கரோனா தீநுண்மியால் ஆண்கள் அதிக அளவில் உயிரிழக்கிறார்களா என்பதைக் கண்டறிய ஆய்வை மேற்கொண்டோம்.