சீனாவில் குய்ஷோ மாகாணத்தில் உள்ள லாப்பிங் பாலத்தில் பயணிக்கும் கார் ஒன்று, ஆற்றுக்குள் பாயும் காணொலி சமூக வலைதளங்கில் பரவிவந்தது. இது குறித்து விசாரிக்கையில், அந்தக் காரை ஜாங் என்ற இளைஞர் ஓட்டிவந்துள்ளார். இந்த விபத்து நடைபெறுவதற்கு முன்புதான் அந்தக் காருக்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் பாலத்தில் காரை திருப்பும்போது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று பாலத்தில் இரண்டு பேர் நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.