தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'பெரும்பான்மையை நிரூபியுங்கள்' - அக்னிப்பரீட்சைக்கு மகாதீர் அழைப்பு - மகாதீர் முகம்மது முஹைதீன் யாசின் மோதல்

கொலாலம்பூர் : மலேசியாவின் புதிய பிரதமராக இன்று பொறுப்பேற்ற முஹைதீன் யாசின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது வலியுறுத்தியுள்ளார்.

mahatir muhyiddin yassin
mahatir muhyiddin yassin

By

Published : Mar 1, 2020, 7:36 PM IST

மலேசியாவில் ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக உலகின் மூத்தப் பிரதமர் என்ற பெருமை பெற்ற மகாதீர் முகம்மது (94) கடந்த திங்கள்கிழமை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, அந்நாட்டில் அரசியல் குழுப்பம் நிலவிவந்தது. இதனிடையே, ஆளும் 'Pact of Hope' கூட்டணிக் கட்சிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மகாதீர் முகம்மதை பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று திடீர் திருப்பமாக மலாய் அரசர் சுல்தான் அப்துல்லா முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசினை அந்நாட்டின் பிரதமராக நியமித்தார்.

'யுனைடட் மலாய் நேஷ்னல் ஆர்கனைசேஷன்' உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் ஆதரவுபெற்ற இவர், இன்று காலை மலேசிய பிரதமராகப் பதவியேற்றார். இதனால் பெரும் அதிர்ச்சியில் உள்ள முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் முஹைதீன் யாசின் நாடாளுமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : கொரோனா: அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details