ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சீர்செய்ய முக்கிய முன்னெடுப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க அரசு, தலிபான், ஆப்கான் அரசு ஆகியோர் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய தரப்பினராக உள்ளனர். அதன்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை அந்நாட்டுக்குத் திரும்பப் பெறும் நோக்கில், ட்ரம்ப் அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.
இந்த நடவடிக்கையானது, அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய பங்காற்றியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான்-தலிபான் ஆகியோருக்கு இடையே பரஸ்பர அமைதியை உருவாக்கும் விதமாக, அமெரிக்க நிர்வாகிகள் முயற்சி செய்துவருகின்றனர். அதன்படி, ஆப்கான் சிறையில் உள்ள 5 ஆயிரம் தலிபான் சிறைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என, இந்த அமைதி ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ளது.