டோக்கியோ:ஜப்பானில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசரகால நிலை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய அந்நாட்டுத் தலைமைச் செயலாளர் கட்சுனோபு கோட்டா கூறுகையில், "ஊரடங்கு தளர்வுகள் காரணமாக மக்கள் உணவு விடுதிகள், கேளிக்கை கூடங்களில் அதிகம் கூடுகின்றனர். இதனால் ஏற்படும் கரோனா பரவலைக் குறைக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
மேலும் மக்கள் உணவு விடுதிகளில் கூடுவதையும், வெளியே சுற்றுவதையும் தவிர்த்து, முடிந்தவரை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுவார்கள்" என்றார்.