தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 29, 2019, 7:06 PM IST

ETV Bharat / international

மணிப்பூர் வரும் ஜப்பான் பிரதமர்...! ஏன் தெரியுமா?

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே வருகிற டிசம்பர் 15ஆம் தேதி இந்தியா வருகிறார். அப்போது அவர் மணிப்பூர் தலைநகர் இம்பால் செல்கிறார்.

Japan PM Abe likely to visit India's Imphal in December
Japan PM Abe likely to visit India's Imphal in December

பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, டிசம்பர் 15ஆம் தேதி இந்தியா வருகிறார். அப்போது அவர் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் தலைநகர் இம்பால் செல்கிறார். இரண்டாம் உலகப் போரின் போது இரு நாட்டு படையினரும் இம்பாலில் தங்கியிருந்தனர். இருநாட்டு போர் வீரர்கள் தங்கியிருந்த போர்க்களமாக இம்பால் விளங்கியது. இதனால் அவர் அங்கு சென்று பார்வையிட உள்ளார்.

இப்போரை நினைவுகூரும் வகையில் அமைதி பூங்கா அருங்காட்சியகம் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்துக்கு அபே செல்கிறார். அங்கு இரண்டாம் உலகப் போரின் உயிர் நீத்த வீரர்களின் ஆத்மா அமைதியடைய தியானம் மேற்கொள்கிறார்.

ஜப்பான் பிரதமர் இரண்டு நாட்கள் இந்தியாவில் தங்கியிருப்பார் என்று அந்நாட்டு ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்தியா ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் இரு நாட்டு பாதுகாப்பு திறன்களையும் பகிர்ந்துகொள்ள உதவும்.

இதையும் படிங்க: அணு ஆயுதங்கள் வேண்டாமே' - மனம் உருகிய போப் பிரான்சிஸ்

ABOUT THE AUTHOR

...view details