தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 27, 2020, 6:43 PM IST

ETV Bharat / international

புதிய வகை கரோனா பரவல் எதிரொலி: வெளிநாட்டினர் ஜப்பான் வரத் தடை

பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டினர் ஜப்பான் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

ஐப்பான் அரசு உத்தரவு
ஐப்பான் அரசு உத்தரவு

டோக்கியோ:பிட்டனின் தென் பகுதியில் கடந்த சில தினங்களாக உருமாற்றமடைந்த வீரியமிக்க கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள், பிரிட்டன் உடனான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்தன.

இந்நிலையில், வெளிநாட்டினர் ஜப்பான் நாட்டிற்குள் நுழை தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த தடை நாளை (டிச.28) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாட்டிலிருந்து டோக்கியோ வந்த ஏழு பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவ்விரு நாட்டைச் சேர்ந்தவர்களும் ஜப்பான் வரத் தடை விதிக்கப்பட்டது.

தற்போது வரை, அந்நாட்டில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 312 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 213 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:சாலையோரம் குண்டு வெடிப்பு : ஆப்கான் பாதுகாப்பு வீரர் பலி

ABOUT THE AUTHOR

...view details