உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. தற்போது, கரோனா வெர்ஷன் 2.0 என கூறப்படும் உருமாறிய கரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வைரஸ் பரவலைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளான மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காக ஜப்பான் சார்பில் இந்தியாவுக்கு 30 பில்லியன் யென் (இந்திய மதிப்பில் சுமார் 2,113 கோடி) கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.