தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீன வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

மாஸ்கோ: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By

Published : Sep 10, 2020, 12:37 PM IST

Jaishankar likely to meet Chinese counterpart
Jaishankar likely to meet Chinese counterpart

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்திய வெளிறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை இன்று (செப்.10) அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்கப்படுகிறது.

எல்லைப்பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த மே மாதம் முதலே பதற்றம் நிலவிவருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீன ராணுவம் முயல்வதாக இந்தியா குற்றம் சாட்டியது.

குறிப்பாக, ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் சீன ராணுவத்தின் வீரர்களும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

எல்லையில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்ற நிலையை தணிக்க இருநாட்டின் ராணுவ உயர் அலுவலர்களும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், எல்லையில் உள்ள நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தச் சூழலில், லடாக்கில் இந்திய-சீன எல்லையைத் தாண்டி வந்து, பாங்கோங் ஏரி சமவெளிப் பகுதிகளில், இந்திய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த இந்திய ராணுவம் சீனாதான் எல்லைத் தாண்டிவந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டாதாக பதிலுக்கு குற்றம் சாட்டியிருந்தது.

எல்லையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினருக்கு இடையே இதற்கு முன் கடைசியாக கடந்த 1967ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் பதற்றநிலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ரஷ்யா சென்றிருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த சனிக்கிழமை சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கேவை சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் வரை ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவும் சீனவும் தங்கள் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்

ABOUT THE AUTHOR

...view details