ஜகார்டா (இந்தோனேசியா): கடலில் மாயமான நீர்மூழ்கி கப்பலில் இருந்த 53 மாலுமிகளும் உயிரிழந்ததாக அரசு அறிவித்துள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலானது மூன்று துண்டுகளாக சிதறிய நிலையில் கடலுக்குள் காணப்படுவதாக இந்தோனேசிய அலுவலர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், உயிரிழந்த மாலுமிகளின் குடும்பச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளது.
நேற்றைய தினமே 800 அடி ஆழத்திலிருந்து நீர்மூழ்கி கப்பலின் சமிக்ஞை கிடைத்தது என அலுவலர்கள் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சிதைவுகளை படம்பிடிப்பதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நீர்மூழ்கி கருவியை கடலுக்கு அனுப்பியதாகக் கூறப்பட்டது.