தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 20, 2020, 11:21 PM IST

ETV Bharat / international

COVID-19 தாக்கம்: உலகளவில் பழங்குடி சமூகம் அழிவைச் சந்திக்கிறது - ஐ.நா. நிபுணர்

ஹைதராபாத்: கரோனா வைரஸ் பரவலால் உலகளவில் வாழும் பழங்குடி மக்கள் அழிவைச் சந்திக்கிறார்கள் என ஐ.நா.சபையின் நிபுணர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Indigenous community
Indigenous community

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் சூழலில் உலகெங்கிலும் உள்ள பழங்குடி சமுதாய மக்கள், இந்த கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஜோஸ் பிரான்சிஸ்கோ காலித்சே கவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் 'கோவிட்-19 தொற்றுநோயால் பூர்வீக சமூகங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் ஒவ்வொரு நாளும் நான் அதிகமான அறிக்கைகளைப் பெற்று வருகிறேன். ஒவ்வொரு நாளும் அவர்களது நிலை எனக்கு கவலை அளிக்கிறது' என ஜோஸ் கூறியுள்ளார்.

'அவர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி தேவைப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் பெரும் துன்பம் ஏற்படும் என இப்போது எனக்குப் புரிகிறது' எனக் கவலை தெரிவித்துள்ளார், ஜோஸ்.

இதையும் படிங்க: கோவிட்-19 தொற்றால் பாதிப்பு என்ன? நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கிறது செபி

ABOUT THE AUTHOR

...view details