சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் 43 வயதான பிரீதம் சிங் (இந்திய வம்சாவளி), தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளரும் ஆவார். இவரது கட்சி நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 93 தொகுதிகளில் போட்டியிட்டு 10 இடங்களை வென்றது. மீதமுள்ள 83 இடங்களையும் மக்கள் செயல் கட்சி கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதையடுத்து சிங்கப்பூரின் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக மாறியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் லீ செய்ன் லூங்கின் கட்சி உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதற்கிடையில், நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ”சிங்கப்பூரில் இதுவரை இதுவரை முறையான எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் நடைபெறவில்லை. இங்கிலாந்து நாடாளுமன்ற அமைப்புகளைப் போலவே, அரசின் கொள்கைகள், மசோதாக்கள், இயக்கங்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாதங்களில் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதில் சிங் எதிர்க்கட்சியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கிறோம். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.