காபூல்:தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து, ஆப்கன் மக்கள் உள்பட பல்வேறு நாட்டின் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். அதன்படி, ஒன்றிய அரசு ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ராணுவ விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
முன்னதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் மூலம், காபூல் இந்திய தூதர தூதர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட 129 பேர் நாடு திரும்பினர். அதைத்தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 21) சி -300 ராணுவ விமானம் 85 இந்தியர்களுடன் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளது.