உலகெங்கிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்து 47 ஆயிரத்து 759க்கும் மேலாக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 97 ஆயிரத்து 245 பேருக்கு மேலாகவும், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே, 16 லட்சத்து 80 ஆயிரத்து 369க்கும் மேலாகவும் உள்ளது.
இந்நிலையில், ஐந்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்ரெஸ், கரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்த இந்த ஆண்டின் நடுப்பகுதியில் 160க்கும் மேற்பட்ட நாடுகள் பள்ளிகளை மூடியுள்ளன. இதனால் பில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் வரலாற்றில் மிகப்பெரிய கல்வி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.