தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சவுதி ராணுவத் தளபதியுடன் இந்திய ராணுவத் தளபதி பேச்சுவார்த்தை!

ரியாத்: இந்தியா-சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டு உயர்மட்ட அலுவலர்களுடன் இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே பேச்சுவார்த்தை நடத்தினார்.

By

Published : Dec 14, 2020, 8:02 AM IST

இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே
இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே

இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவணே நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்மூலம், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் செய்த முதல் இந்திய ராணுவத் தளபதி என்ற பெருமையை நரவணே பெற்றுள்ளார்.

இந்தப் பயணத்தில், இரு நாடுகளின் ராணுவத் தளபதிகளையும், மூத்த ராணுவ அலுவலர்களையும் சந்தித்து இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து நரவணே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே

தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக சவுதி அரேபியா சென்றுள்ள ராணுவத் தளபதி நரவணே, அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அலுவலர்களுடன் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்து குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

ராயல் சவுதி தரைப்படைத் தலைமை அலுவலகம், கூட்டுப்படை கட்டுப்பாடு தலைமையகம், மன்னர் அப்துல் ஆசிஸ் ராணுவ அகாதமி ஆகியவற்றையும் ராணுவத் தளபதி பார்வையிடுகிறார். சவுதியில் உள்ள தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் ராணுவத் தளபதி அங்குள்ள மாணவர்களுடனும், பேராசிரியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ராயல் சவுதி தரைப் படைகளின் தளபதி ஜெனரல் ஃபஹத் பின் அப்துல்லா முகமது அல்-முதிருடன் நரவணே

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள இந்திய ராணுவ இயக்குநரகம், "இந்தியா-சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ராணுவத் தளபதி நரவணே, ராயல் சவுதி தரைப் படைகளின் தளபதி ஜெனரல் ஃபஹத் பின் அப்துல்லா முகமது அல்-முதிருடன் ஆலோசனை மேற்கொண்டார்" என்று தெரிவித்துள்ளது.

மேலும், சவுதி அரேபியாவின் ராணுவ உயர் அலுவலர் ஃபயாத் பின் ஹமீத் அல் ருவாய்லியைச் சந்தித்துப் பேசிய நரவணே இருநாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நலன் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்த நரவணே, அங்கு இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலனை மேம்படுத்துவது குறித்து ஐக்கிய அரபு அமீரக தரைப் படைகளின் தளபதி சலே முகமது சலே அல் அமேரியுடன் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஊழியர்கள் ஆவேசத்தால் சிதறிய ஐபோன் தொழிற்சாலை: 119 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details