ஹாங்காங்கை சேர்ந்த ஆப்பிள் டெய்லி என்ற தினசரி நாளிதழ் அரசின் அச்சுறுத்தல் காரணமாக தனது பதிப்பை இன்று முதல் நிறுத்தியுள்ளது. இதற்கு சர்வதேச சமூகத்திலிருந்து பல்வேறு எதிர்ப்பு குரல்கள் எழுந்துவருகின்றன.
தைவான் அதிபர் கண்டனம்
நாளிதழ் முடக்கத்திற்கு தைவான் அதிபர் த்சாய் இங்க் வென் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஹாங்காங் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், ஹாங்காங் கருத்து சுதந்திரத்திற்கு தைவான் துணை நிற்கும் எனத் தெரிவித்தார்.