தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சிரிய அகதிகளை துருக்கி மட்டும் ஏற்காது - அதிபர் எர்டோகன் - சிரிய அகதிகள்

அங்காரா: சிரியாவிலிருந்து வரும் அகதிகளை துருக்கி மட்டும் ஏற்காது என அந்நாட்டின் அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.

Erdogan
Erdogan

By

Published : Dec 23, 2019, 2:47 PM IST

துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், அந்நாட்டு அதிபர் எர்டோகன் கலந்து கொண்டார். அப்போது அவர், "இட்லிப் பகுதியிலிருந்து 80,000 சகோதரர்கள் நம் நாட்டின் எல்லையோர பகுதிகளை நோக்கி வர தொடங்கியுள்ளனர். இதுபோன்ற சூழலில், அவர்களின் சுமையை துருக்கி மட்டும் ஏற்காது.

இட்லிப் பகுதியில் நடக்கும் தாக்குதல்களை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்த மாஸ்கோவிற்கு ஒரு குழு செல்லவுள்ளது. இதன் முடிவுகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

இட்லிப் பகுதியில் உள்ள போராளிகள் மீது சிரியா மற்றும் ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தினர். இதனால், துருக்கியை நோக்கி அந்நாட்டு மக்கள் அகதிகளாக படையெடுத்து வருகின்றனர். 3.6 மில்லியன் சிரிய அகதிகளுக்கு துருக்கி அடைக்கலம் தந்துள்ளது. அவர்களுக்காக 40 பில்லியன் டாலர்களை அந்நாடு செலவழித்துள்ளது.

இதையும் படிங்க: சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

ABOUT THE AUTHOR

...view details