தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியா, அதன் ஆதரவு நாடுகள் மீது ஏவுகணை பாயும் - பாக். அமைச்சர் மிரட்டல்! - பாகிஸ்தான் செய்தியாளர் நைலா இனியாட்

லாகூர்: இந்தியா மீதும் அதன் ஆதரவு நாடுகள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Countries backing India will be hit by missile: Pak minister

By

Published : Oct 30, 2019, 4:58 PM IST

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பக்கம் நிற்காமல், இந்தியாவின் பக்கம் நிற்கும் எந்த நாடும் பாகிஸ்தானின் எதிரி நாடாகவே கருதப்படும் என்றும் அப்படி இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது பாகிஸ்தான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தும் எனவும் பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத் துறை அமைச்சர் கில்கித் பல்திஸ்தான் அலி அமின் கந்தபூர் மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.

இந்தக் காணொலி பாகிஸ்தான் ஊடகவியலாளர் நைலா இனியாட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் பேசியதை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தும், 'இந்தச் செய்தி கண்டிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைச் சேரும் என நான் நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நிதி நடவடிக்கை பணிக்குழு எனப்படும் எஃப்.ஏ.டி.எஃப். (FATF) அமைப்பு, பாகிஸ்தானுக்கு பிப்ரவரி மாதம்வரை காலக்கெடு விதித்து எச்சரித்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் மார்ச் மாதத்தில் கறுப்புப் பட்டியலில் வைக்கப்படும் எனக் கூறி க்ரே பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க...பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு காலக்கெடு!

ABOUT THE AUTHOR

...view details