சீனாவில் தன் வேட்டையை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு மக்களுக்கு பீதியை ஏற்படுத்திவருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பால் 6 ஆயிரத்து 600 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக தென் கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.