சீனா தற்போது கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து மீண்டு, பழைய நிலைக்குத் திரும்புகிறது. இந்நிலையில், மக்களை இயல்புநிலைக்கு திருப்ப திரையரங்குகளை ஒரு கருவியாக எடுத்திருக்கிறது சீன அரசு.
இரண்டு மாதங்களாக மூடிக்கிடந்த திரையங்குகள் நாளைமுதல் திறக்கப்படும் என ஷாங்காய் நகரத்தின் செய்தித் தொடர்பாளர் யென் ஜின் (Yin Xin) தெரிவித்திருக்கிறார்.
700 முதல் 800 திரையரங்குகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் நகரத்தில் 380 திரையரங்குகள் செயல்படும். மற்ற திரையரங்குகள் விரைவில் மீண்டு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.