சீனாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான அலிபாபா, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள 'Fortune 500' (முன்னணி நிறுவனங்களுக்கான தரமதிப்பீடு) நிறுவனங்களில் ஒன்றாகும். உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாகவும் இது விளங்குகிறது.
அந்நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜாக் மா, தற்போது முக்கியப் பொறுப்புகளிலிருந்து விலகி, கல்விப் பணி, சமூக சேவை போன்றவற்றில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். இச்சூழலில் அலிபாபா நிறுவனத்திற்கு எதிராக முக்கிய நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.