சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900யையும் தாண்டியுள்ளது. மேலும் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சீன அரசு "close contact detector" எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. செயலியின் பயனாளிகள் தங்களுடன் இருக்கும் கரோனா பாதிக்கப்பட்டவரை சுகாதார அலுவலர்கள் உதவியுடன் தங்களுக்கு தொற்று வராமல் பார்த்துக் கொள்ள இந்த செயலியில் அறிவுறுத்தப்படுகிறது.