நேபாள எல்லைக்குட்பட்ட பல பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நேபாள அரசு மௌனம்காத்துவரும் வேளையில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைச் சீனாவுடன் பேசி மீட்டெடுக்குமாறு அந்நாட்டு எதிர்க்கட்சியினர் நேபாள நாடாளுமன்ற கீழவையில் தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்ற கீழவைச் செயலருக்கு எதிர்க்கட்சி அனுப்பிய கடிதத்தில், "டோக்லாம், ஹும்லா, சின்துபால்சவுக், கோர்க்கா, ரஸுவாமா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 64 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது.