தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 22, 2019, 7:36 AM IST

Updated : Apr 22, 2019, 9:28 AM IST

ETV Bharat / international

இலங்கையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுப்பு!

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டது.

கொழும்பு

இலங்கையில் நான்கு தேவாலயங்கள், மூன்று நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 215 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு வெடிகுண்டு இன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒன்பதாவது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதன் பின்புலத்தில் எந்த இயக்கம் உள்ளது என்பதை போலீசாரும், உளவுத்துறை அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Last Updated : Apr 22, 2019, 9:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details