பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் டர்பட் என்னும் இடத்தில் உள்ள ஒரு கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென வெடித்தது. இந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த எட்டு பேர்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த வெடிகுண்டு விபத்தில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர்.