தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 23, 2020, 1:15 AM IST

ETV Bharat / international

ஆம்பன் புயல்: நலம் விசாரித்த வங்கதேச பிரதமர்

டெல்லி: ஆம்பன் புயல் ஏற்படுத்திய சேதாரத்தைப் பற்றியும், மக்களின் நலனைப் பற்றியும் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடமும் மம்தாவிடமும் தொலைபேசி மூலம் கேட்டு அறிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Bangladesh PM
Bangladesh PM

வங்கக் கடலில் உருவான அதி உச்ச உயர் தீவிரப் புயலான ஆம்பன், மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவை ஒட்டியுள்ள சுந்தரவனக் காடுகள் இடையே கரையைக் கடந்தது. இந்நிலையில் ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்துக்கு ஏற்பட்ட சேதம் தேசியப் பேரிடருக்கும் அதிகமானது என்று கூறலாம் எனவும்; என் வாழ்வில் இதுபோன்ற புயலை நான் பார்த்தது இல்லை எனவும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் 60 விழுக்காடு மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம்பன் காரணமாக நெருக்கடி ஏற்பட்ட இந்த நேரத்தில் வங்காள மக்களுக்கு தனது ஆதரவையும் கவலைகளையும் தெரிவிக்க தனிப்பட்ட முறையில் என்னை அழைத்ததற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஜிக்கு நான் மனமார்ந்த நன்றி கூறுகிறேன். நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வெள்ளிக்கிழமை மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது ஆம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரித்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவு: நிர்வாகக் குழு அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details