பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்வாட் மாவட்டத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஷ்ணு ஆலயம் பாகிஸ்தான், இத்தாலிய தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்றியப்பட்டுள்ளது. இந்தக் இந்துக்கோயில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்துள்ளது. ஸ்வாட் மாவட்டம் மலைகள் நிறைந்த பகுதியாகும்.
கைபர் பக்துன்வாவில் உள்ள பைசல் காலிக் தொல்லியல் ஆராய்ச்சி குழுவினரும் இத்தாலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் பாரிகோட் குந்தாய் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை (நவ.19) இப்பகுதியில் அழகிய விஷ்ணு கோயில் ஒன்றை கண்டுபிடித்தனர்.
இந்தக் கோயில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் காணப்படுகிறது. மேலும் கோயிலுக்கு அருகில் தெப்பக் குளமும் வெட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் நீராடிவிட்டு பக்தர்கள் கோயிலுக்குள் வழிபாடு நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோயில் குறித்து பாகிஸ்தான் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இது ஒரு விஷ்ணு ஆலயம். அருகில் குளங்களும் இதர கட்டட அமைப்புகளும் உள்ளன.