ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள மூஸா குவாலா என்ற மாவட்டத்தில் அல்-குவைதா பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாக, அந்நாட்டு உளவுத் துறையான தேசியப் பாதுகாப்பு இயக்குநரகத்துக்கு (National Directorate of Security) ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மூஸா குவாலா மாவட்டத்தில் அமெரிக்க - ஆப்கானிஸ்தான் கூட்டுப் படையினர் அங்கு திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், இந்தியத் துணைக் கண்டத்திற்கான அல்-குவைதா தலைவர் அசீம் உமர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவராவார். அப்பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பல்வேறு மூத்தத் தலைவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.