தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மோடிக்கு குவியும் உலகத் தலைவர்களின் வாழ்த்து!

17ஆவது மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி, நேபாளம் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

By

Published : May 23, 2019, 4:23 PM IST

அஷ்ரஃப் காணி

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானியும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "வலுவான தேர்தல் முடிவை அடைந்துள்ள மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் அரசும், எங்கள் நாட்டு மக்களும் இந்தியாவுடனான உறவை மேலும் மேம்படுத்த ஆவலாக உள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, பிரதமர் மோடிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை நேபாளம் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details