பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மதரசாவில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டபோது, குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 8 பேர் உயிரிழந்தனர். 137 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் பெஷாவர் மதராசாவில் குண்டுவெடிப்பு: 55 பேர் கைது! - பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு
கராச்சி: பாகிஸ்தானில் மதராசாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என கருதிய 55 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![பாகிஸ்தான் பெஷாவர் மதராசாவில் குண்டுவெடிப்பு: 55 பேர் கைது! ak](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:51:43:1603966903-9353725-57-9353725-1603961858237.jpg)
ak
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 55 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு 5 கிலோ அளவுக்கு வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.