கரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கை கடற்படையினர் 29 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து இலங்கையின் ராணுவத் தளபதி சுவேந்திர சில்வா பேசுகையில், ''ஜா-எலாவின் சுடுவெல்லாவில் கரோனாவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, 29 கடற்படை வீரர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வெலிசாரா பகுதியில் அமைக்கப்பட்ட கப்பல் படை முகாம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.