தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் வான்வெளித் தாக்குதல்; 25 பயங்கரவாதிகள் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தான் பால்க் பகுதி

காபூல்: ஆப்காஸ்தானின் பால்க் பகுதியில் நடைபெற்ற வான்வெளித் தாக்குதலில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Taliban
Taliban

By

Published : Jun 25, 2020, 7:17 PM IST

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் அந்நாட்டு அரசுக்கு இடையே மோதல் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகிறது. அங்கு இரு தரப்புக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திவைக்கும் முயற்சியில் களமிறங்கிய அமெரிக்கா, முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

அமைதி ஒப்பந்தத்திற்குப்பின் இரு தரப்பும் தொடர்ந்து மோதல் போக்கையே கடைப்பிடித்துவருகின்றன. இந்நிலையில், அங்கு ரமலான் மாதத்தின் காரணமாக இரு தரப்பும் போர் நிறுத்தத்தை கடைபிடித்தன. தற்போது ரமலான் மாதம் முடிந்துள்ள நிலையில் மீண்டும் அங்கு தாக்குதல் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

ஆப்கானிஸ்தானின் பால்க் பிராந்தியத்தில் அந்நாட்டு ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்தியதில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து இதுவரை தலிபான் தரப்பு எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் அந்த அமைப்பு மீண்டும் பதில் தாக்குதல் நடத்தும் என்று பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவிட்-19 தாக்கம்: விசா விதிமுறைகளில் கொண்டுவந்த மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details