தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானில் பேருந்து மீது மோதிய ரயில் : 29 சீக்கியப் பயணிகள் பலி - ஷா ஹுசைன் விரைவு ரயில்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள ஷேக்குப்புரா பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் 29 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

Pakistan
Pakistan

By

Published : Jul 3, 2020, 5:36 PM IST

பாகிஸ்தானில் உள்ள ஷேக்குப்ரா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 29 சீக்கியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகணத்தில் சீக்கியர்கள் பலர் வசித்து வரும் நிலையில் அங்குள்ள புனிதத் தலத்திற்கு மினி பஸ் ஒன்றில் சீக்கியர்கள் பயணம் மேற்கொண்டனர்.

அப்போது ரயில்வே லெவல் க்ராசிங்கை கடக்கும் போது ஷா ஹுசைன் விரைவு ரயில் பேருந்து மீது மோதியதில் அதில் பயணம் செய்த 29 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

இதையும் படிங்க:மக்களுக்கு தவறான வழியை காட்டாதீர்கள் - பதஞ்சலி நிறுவனத்தை எச்சரிக்கும் அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details