துபாய் நாட்டிலிருந்து புறப்படும் விமானத்தில், பொருட்கள் கொண்டு செல்வதில் புதியக் கட்டுப்பாட்டை அந்நாட்டின் காவல் துறை விதித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் ரசாயனப் பொருட்கள், கார் உதிரி பாகங்கள், பெரிய அளவிலான உலோகங்கள், பவர் பேங்க், பேட்டரி, டார்ச் லைட், தீப்பற்றக்கூடிய பொருட்கள், அதிக அளவிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்கள், மின் சிகரெட்டுகள் போன்ற 13 பொருட்களுக்குத் தடை விதித்துள்ளனர்.