சீனாவுக்கு தைவானுக்கும் இடையே அன்மைக் காலமாக மோதல் போக்கு தீவிரமடைந்துவருகிறது. தெற்கு சீன கடல் பிராந்தியத்தில் சீனா தனது போர்கப்பலை நிறுத்தி தைவானை சீண்டிவருகிறது.
அதேபோல் தைவான் வான் எல்லைப்பகுதியிலும் தனது விமானங்களை செலுத்தி தைவானுக்கு அவ்வப்போது குடைச்சல் தந்துவருகிறது. இந்நிலையில், நேற்று சீனாவின் 13 போர் விமானங்கள் தைவானின் வான் எல்லைப் பகுதிக்குள் பறந்தன.
இதற்கு பதில்தரும் விதமாக, தைவானும் தனது வான் எல்லைகளில் ரோந்து விமானங்களை அனுப்பி கண்காணித்தது. மேலும், சீனாவின் ராணுவ விமானங்களை ரேடியோ சிக்னல்கள் மூலமாக கண்காணிக்கவும் செய்தது.