கோவிட் -19 வைரஸ் பெருந்தொற்றால் உலக நாடுகள் பெரும்பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஈராம், இத்தாலி, வட கொரியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில், ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளுக்கு உதவ முன்வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவிக்கும்போது, ஈரான், வட கொரியா மட்டுமல்ல, கரோனாவால் பாதித்துள்ள பிற நாடுகளுக்கும் உதவ தயாராகயிருக்கிறோம். இந்த வைரஸால் 140 நாடுகள் பாதித்துள்ளன. நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டுவருகிறது. குறிப்பாக, ஈரானுக்கு இது மிகப்பெரிய இழப்பு. தற்போது, பொருளாதாரரீதியான உதவிகளுக்கு வாய்ப்பில்லை என்றாலும்கூட உடனிருப்போம். முதலில் எங்கள் நாட்டிலுள்ள பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும். எய்ட்ஸ், மலேரியா உள்ளிட்ட நோய்களை கட்டுக்குள் கொண்டுவர பல நாடுகளுக்கு நிதியுதவி அளித்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்.