தீயவை ஒழிந்து நல்லவை வெற்றிபெற்ற நாளான தீபாவளியன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலகை உலுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அது என்னவென்றால் அமெரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கையில், ஐஎஸ் பயங்கரவாதத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார் என்பதுதான். பல நாடுகளை ஒன்றிணைத்து தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி இஸ்லாமிக் ஸ்டேட் என்ற நாட்டை உருவாக்குவதே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நோக்கமாக இருந்துவந்தது. இந்த பயங்கரவாத அமைப்பு அதன் பெயரை 2014ஆம் ஆண்டு இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) என மாற்றிக் கொண்டது.
பாக்தாதியின் தலைக்கு 2.5 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அந்நாட்டு அரசு அறிவித்தது. சிரியாவில் உள்ள ரக்கா என்ற பகுதியின் மீது அமெரிக்கப் படை தாக்குதல் நடத்தியபோது பாக்தாதி இறந்திருக்கலாம் என்று ரஷ்யா அறிவித்த போதிலும், அவர்களின் கூற்றை ட்ரம்ப் மறுத்தார். ஐ.எஸ். அமைப்பை அழிக்க பூர்வக்குடி மக்களான குர்து உதவியை அமெரிக்கா நாடியது. ரஷ்யா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகளின் வான்வெளியைப் பயன்படுத்தி சிரியாவின் இத்லிப்பில் பதுங்கியிருக்கும் பாக்தாதியை 8 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்கின.
இதன் விளைவாக பாக்தாதி சுரங்கப்பாதை வழியாகத் தப்பி இறுதியில் தற்கொலை செய்துகொண்டார். அமெரிக்கப் படைகளின் முழு நடவடிக்கையையும் நேரடியாகப் பார்த்ததாகக் கூறிய ட்ரம்ப், டி.என்.ஏ. பரிசோதனை நடந்து 15 நிமிடங்களுக்குள் பாக்தாதி இறந்துவிட்டதாக அறிவித்தார். உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் வரும் விமர்சனங்களைத் தவிர்க்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது இதன் மூலம் தெரியவருகிறது. ஆனால் ஐ.எஸ். தலைவரின் மரணம் பயங்கரவாதக் குழுவிற்கு ஒரு முடிவுதானா என்று மக்கள் இன்னும் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான், அதன் ஆதரவு அமைப்பான அல்கொய்தா ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தம் தொடங்கப்பட்டது. தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க படையினர் வெற்றிகண்ட பிறகு, அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் பாதுகாத்து வந்தது. ராணுவ நடவடிக்கையின் மூலம் பின்லேடன் கொல்லப்பட்டதை 2011ஆம் ஆண்டு ஒபாமா அரசு பெருமையுடன் அறிவித்தது.
லேடன் கொல்லப்படுவதைவிட பாக்தாதி கொல்லப்படுவது மிக முக்கியமானது என்ற ட்ரம்ப்பின் அறிவிப்பு விமர்சனங்களை ஈர்த்த போதிலும், ஐ.எஸ். அமைப்பால் தூண்டப்பட்ட பயங்கரவாதம் உலக நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தின. இஸ்லாமியர்களின் உரிமைகளை சமரசம் செய்யும் சீனா, இந்தியா, பாலஸ்தீனம், சோமாலியா, எகிப்து, ஈராக், ஈரான், பிலிப்பைன்ஸ், மொராக்கோ போன்ற நாடுகள் தங்களின் கொள்கைகளை விரிவுப்படுத்த ஐ.எஸ். அமைப்பு அழைப்பு விடுத்தது.