தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 18, 2020, 4:36 PM IST

ETV Bharat / international

கரோனா வைரஸ் குறித்த அமெரிக்க ஆய்வு தரும் புது தகவல்!

வாஷிங்டன் : கரோனா பெருந்தொற்று பாதிப்புகள் குறித்த அமெரிக்க தேசிய சுகாதார இயக்குனரின் ஆய்வுத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Corona virus
Corona virus

கரோனா பெருந்தொற்று தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த தொற்று ஒவ்வொரு நபரின் உடல்நிலைக்கேற்ப மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துவது, மருத்துவ நிபுணர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது.

இது தொடர்பாக ஆய்வுத் தகவல் ஒன்றை அமெரிக்காவின் தேசிய சுகாதார இயக்குனர் பிரான்சிஸ் காலின் தற்போது வெளியிட்டுள்ளார். அதில், மனிதர்களின் ரத்த மாதிரிகளுக்குத் தகுந்தாற்போல், இந்த வைரஸ் பாதிப்பு மாறுபட்டத் தாக்கத்தை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது.

அதன்படி ’ஏ’ பிரிவு ரத்தவகை கொண்டவர்களுக்கு இந்த வைரஸ் 50 விழுக்காடு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அதேவேளை ’ஓ’ பிரிவு ரத்த வகைக் கொண்டவர்களின் மேல் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும் உடல் பருமன் அதிகம் கொண்ட நபர்களை இந்த வைரஸ் தீவிரமாக தாக்கக்கூடும் எனவும் தெரிய வந்துள்ளது. உடல் பருமனைக் குறிக்கும் பி.எம்.ஐ. அளவீட்டில், 30க்கும் குறைவான பி.எம்.ஐ கொண்டவர்களுக்கு நோய் தீவிரம் குறைவாகக் காணப்படுகிறது.

30-34 பி.எம்.ஐ. அளவுகோலைக் கொண்டவர்களுக்கு இரு மடங்கு அதிக தாக்கமும், 35க்கும் மேற்பட்ட பி.எம்.ஐ கொண்டவர்களுக்கு மும்மடங்கு தீவிர பாதிப்பும் ஏற்படும் எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்த மோடி!

ABOUT THE AUTHOR

...view details