தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பெண்கள், குழந்தைகளை நினைத்தால் கவலையாக உள்ளது - உலக சுகாதார அமைப்பு - கோவிட்-19 பாதிப்பு பெண்கள், குழந்தைகள்

ஜெனிவா : கோவிட்-19 வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகளை விட, பெண்கள், குழந்தைகள், பதின்ம வயதினருக்கு ஏற்படும் மறைமுக பாதிப்புக்கள் கவலை அளிப்பாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

Tedros Adhanom
Tedros Adhanom

By

Published : Jun 13, 2020, 3:27 PM IST

ஜெனிவாவில் நேற்று நடந்த இணையவழி செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய டெட்ரோஸ் அதானோம், "கோவிட்-19 தொற்றைச் சமாளிக்க உலக நாடுகளின் சுகாதார அமைப்புகள் திண்டாடி வருகின்றன.

குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்துக்குச் சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு தீவிர அறிகுறி இல்லாத தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதை யாரும் தடுக்க வேண்டாம்.

கோவிட்-19 வைரஸால் பதின்ம வயதினர், 30 வயதுக்கு உள்பட்டோர் மன அழுத்தம், ஆன்லைன் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை, தேவையற்ற கர்ப்பம் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகும் அபாயமும் அதிகரித்துள்ளது” என்றார்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ், தற்போது உலகெங்கிலும் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

இந்நோய்க் காரணமாக உலகளவில் இதுவரை 76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக பொருளாதாரம் வரலாறு காணாத அளவிற்குச் சரிவைச் சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : இந்திய ராணுவ அகாதமியில் பயிற்சி: ராணுவத்தில் இணையும் 333 வீரர்கள்

ABOUT THE AUTHOR

...view details