வாஷிங்டன்: கரோனா வைரஸுக்கு எதிரானப் போரில், தடுப்பூசி முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. பல நாடுகளில் மும்முரமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மக்களுக்குப் பல சலுகைகளை அறிவித்து, தடுப்பூசியைச் செலுத்தி வருகின்றனர்.
இருப்பினும், சில நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், நட்பு நாடுகள் தடுப்பூசியை இலவசமாக வழங்கி வருகிறது. அந்த வரிசையில், உலக நாடுகளுக்கு உதவிட அமெரிக்காவின் பைடன் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சுமார் 500 மில்லியன்(50 கோடி) கரோனா தடுப்பூசிகளை பைஃசர் நிறுவனத்திடமிருந்து வாங்க முடிவு செய்துள்ளது.