அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களில் அதிதீவிரமாக அதிகரித்துவருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது. அங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 11 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 24 மணி நேரத்தில் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமும் ஆயிரக்கணக்கானோர் நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் முகக்கவசம், வென்ட்டிலேட்டர் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அங்கு ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் நிலைமை சீர்செய்யப்படும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.