அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒரு மாதமாக பற்றி எரியும் காட்டுத் தீயால் 30 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகி உள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
கலிபோர்னியா மாகாணத்தில் 28 இடங்களில் பற்றி எரிந்துவரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நெருப்பினால் ஏற்பட்ட புகையால் அங்கு சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு காற்றின் தரம் மோசமடைந்ததுள்ளதாக வானிலை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது, இந்தக் காட்டுத்தீ அருகிலிருக்கும் மாகாணங்களுக்கும் பரவ தொடங்கியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.