தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 12, 2019, 7:17 PM IST

ETV Bharat / international

ட்ரம்புக்கு எதிரான போரில் வெல்வார்களா ‘ஜனநாயகவாதி’கள்?

அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஜனநாயக கட்சியினர் மக்களிடையே எடுத்துச் செல்ல திட்டமிட்டிருப்பது, அடுத்தாண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.

Trump

மக்களின் மனதில் பிரிவினைவாதம் தூண்டப்பட்ட நிலையில், அடுத்தாண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி ஆகியவைக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு பெரும்பான்மையினரின் ஆதரவு இருந்தபோதிலும், அது மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் முக்கிய வேட்பாளராக பார்க்கப்படுபவர் ஜோ பைடன். இவரை மடக்குவதற்கு அமெரிக்க அதிபர் டர்ம்ப், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது அதிகாரத்தை ட்ரம்ப் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தி பைடனை சிக்க வைக்க முயற்சித்தார் என்பது பதவி நீக்க விசாரணையில் தெரியவரவுள்ளது.

அமெரிக்காவின் துணை அதிபராக ஜோ பைடன் இருந்தபோது, உக்ரைன் நாட்டின் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக அவரின் மகன் ஹண்டர் பைடன் இருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த டர்ம்ப், ஸெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

Trump impeachment case

ஹண்டருக்கு எதிரான விசாரணை தொடங்காததால் அந்நாட்டுக்கு தரவிருந்த 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை ட்ரம்ப் தர மறுத்ததாக தகவல் வெளியானது. ரஷ்யாவிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள உக்ரைன் நாட்டுக்கு அந்த நிதிதேவைப்பட்டபோதிலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் அளித்தபோதிலும் ட்ரமப் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் சர்ச்சை வெடிக்க, இறுதியில் நிதி வழங்கப்பட்டது. அந்த நிதி எப்படி முடக்கப்பட்டது என ஜனநாயகக் கட்சியினர் நிரூபிக்க வேண்டும். ஆனால், மேலாண்மை அலுவலகத்தில் இருக்கும் சில அலுவலர்கள் ட்ரம்புக்கு எதிரான சாட்சியமாக மாற மறுத்துவிட்டனர். 13 சாட்சியங்கள் ஆஜராக வேண்டிய நிலையில், இருவர் மட்டுமே ஆஜரானார்கள்.

வெள்ளை மாளிகையின்முன்னாள் அலுவலர்கள் உள்ளிட்ட பல சாட்சியங்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டு, அவர்களை ட்ரம்ப் தன் பக்கம் இழுத்ததாக, ஜனநாயக கட்சியினர் சாட்சியத்தோடுஅம்பலப்படுத்தினர். ட்ரம்ப், ஸெலன்ஸ்கி ஆகியோர் இடையே நடந்த சந்திப்பு குறித்த தகவல்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஜூலை 25ஆம் தேதி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பல அமெரிக்க அலுவலர்கள் அனுப்பிய தகவலின்படி ட்ரம்ப் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்பதை தன்னார்வு தொண்டு நிறுவனம் வெளியே கொண்டுவந்தது.

Trump impeachment case

ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு இந்த விவகாரத்தை முன்வைக்கலமா என்ற விவாதம் பலர் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அமெரிக்க அரசியலமைப்பின்படி, நாட்டுக்கு எதிரான துரோகம், லஞ்சம், உயர் குற்றங்கள் ஆகியவை அடிப்படையில்தான் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். ஆனால், அங்கு குறிப்பிடப்பட்டுள்ள உயர் குற்றம் என்பது எதை குறிக்கிறது என்பதற்கான சரியான தகவல் இல்லை. அந்த உயரம் குற்றம் என்ன என்பதை சமகால அரசியல்வாதிகள் கண்டறிந்து அரசியலமைப்பில் சேர்க்க வேண்டும்.

குற்றப்பத்திரிகையில் பெயரைச் சேர்க்க அமெரிக்க மேலவையின் அனுமதி தேவை. குறிப்பிட்ட ஒருவரை குற்றவாளியாகச் சேர்க்க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. அமெரிக்க கீழவையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜனநாயக கட்சியினர் ட்ரம்பை பதவி நீக்கம் செய்தவற்கு அதிக வாய்ப்புண்டு. ஆனால், மேலவையை பொறுத்தவரை குடியரசு கட்சியே ஆதிக்கம் செலுத்திவருகிறது. எனவே, அங்கு பதவி நீக்க தீர்மானம் நிறைவேறுவது கடினமானதாகும்.

பில் கிளிண்டனை பதவி நீக்கம் செய்தபோதிலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. ரிச்சர்ட் நிக்சனை பதவி நீக்கம் செய்வதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இருவரின் ஆதரவு இருந்ததால், பதவி நீக்கம் செய்வதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்துவிட்டார். ரிச்சர்ட் நிக்சன் வழக்கை பொறுத்தவரை தொலைக்காட்சி பெரும் பங்காற்றி வாட்டர்கேட் ஊழலை அவருக்கு எதிராக முன்னெடுத்துச் சென்றது. சமூக வலைத்தளங்கள் இருப்பதால் பதவி நீக்க தீர்மானம் குறித்த விவாதங்கள் வேறொரு நிலைக்கு சென்று விட்டது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் விவாதங்களை அரசியல் கட்சிகள் தனக்கு ஆதரவாக பயன்படுத்திகொள்கின்றன. பொதுவெளியில் எழுப்பப்படும் விவாதங்களிலும் ஒரு ஆபத்து உள்ளது. அதனை பயன்படுத்திக்கொண்டு குடியரசு கட்சி பல கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிடுகின்றன.

அமெரிக்காவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பல நாடுகள் முயன்றுவருவதாகவும் அதற்கு தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று உதவியதாகவும் ஒரு வதந்தி கட்டவிழ்க்கப்பட்டது.

தனக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தை டர்ம்பு கடுமையாக விமர்சித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துவருகிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள குடியரசு கட்சி ஆதரவாளர்கள் பெரும்பான்மையானோர் ட்ரம்ப்க்கு ஆதரவாகவே உள்ளனர். ட்ரம்ப், ஜெலன்ஸ்கி இடையேயான தொலைபேசி உரையாடல் பொருத்தமற்றவை என்றும், பதவி நீக்கம் செய்யும் அளவுக்கு அது பெரிய குற்றம் அல்ல எனவும் டர்ம்ப் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தன்னார்வு தொண்டு நிறுவனம் குறித்த தகவல்களை ஜனநாயக கட்சி வெளியிடவில்லை. பதவி நீக்கம் குறித்த தீர்மானம் முழுவதும் முறைகேடானவை என ட்ரம்ப் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனநாயக கட்சியின் முக்கிய உறுப்பினரும் அவை சபாநாயகருமான நான்சி பேலோசி தன் கட்சியிலிருந்து அழுத்தம் வந்தபோதிலும் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு எதிராக உள்ளார். இதுபோன்ற விவகாரங்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக முடியும் என்பதால் முக்கிய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பதவி நீக்கம் குறித்த விவகாரம் 2020 தேர்தலில் எதிரொலிக்கும் என இப்போது கூறுவது அவசியமற்றது. ஆனால், வரும் காலங்களில் அது முக்கிய பிரச்னையாக எழுப்பப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிங்க: மக்கள் முன்னிலையில் ட்ரம்ப் பதவி நீக்க விசாரணை - ஜனநாயகக் கட்சி

ABOUT THE AUTHOR

...view details