அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தந்தை வழி தாத்தா ஃபிரெட்ரிக் ட்ரம்ப் 1918 ஆண்டு ஸ்பானிஷ் புழு காய்ச்சல் தொற்று நோயால் மரணித்துள்ளார். ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை தாக்கிய ஸ்பானிஷ் புழு காய்ச்சலால், ஆறு லட்சத்து 75 ஆயிரம் பேர் மரணம் அடைந்ததாக தகவல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
அமெரிக்காவில் ஸ்பானிஷ் புழு காய்ச்சல் பரவல் காரணமாக, அப்போதும் இதேபோன்று சமூக இடைவெளி கடைப்பிடிப்பு, கை, கால் கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வீடுகளின்றி தொழிற்சாலைகள் மற்றும் தெருக்களில் தங்கும் நிலை ஏற்பட்டது.