இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட 106 செயலிகளுக்கு மத்திய அரசு முன்னதாகத் தடை விதித்தது.
மேலும், இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வேறு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக, அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் காரணமாக, அமெரிக்காவில் விரைவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் தகவல் பரவியது.
இந்நிலையில், அமெரிக்காவில் டிக்டாக், வீ சாட் ஆகிய செயலிகளை தடை செய்யும் புதிய உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவில் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனத்துடன் அனைத்து வகையான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபர் ட்ரம்ப் கூறுகையில், "சீன நிறுவனங்களால் உருவாக்கப்படும் செயலிகளால் அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஒரு குறிப்பிட்ட செயலியின் (டிக்டாக்) செயல்பாடு குறித்து தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.