அமெரிக்காவில் நாளை மறுநாள் (நவ. 3) அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகின்றார்.
தற்போதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியே முன்னணியில் உள்ளது. குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஜோ பிடனுக்கு ஆதரவளிக்கின்றனர். அதேபோல் வெள்ளையின மக்கள் ட்ரம்ப்பிற்கு ஆதரவளிக்கின்றனர்.
இந்நிலையில் இழுப்பறி மாகாணமாக கருதப்படும் ஐயோவா மாகாணத்தில் பிடனைவிட ஏழு விழுக்காடு வாக்குகளை ட்ரம்ப் கூடுதலாக பெறுவார் என்று டெஸ் மொய்ன்ஸ் பதிவு / மீடியா காம் தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. அதாவது ட்ரம்ப் 48 விழுக்காடு வாக்குகளையும், ஜோ பிடன் 41 விழுக்காடு வாக்குகளையும் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.