அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ள நிலையில், இந்த வைரஸ் பரவல் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் செயல்பாட்டை அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ச்சியாக விமர்சித்துவந்தார்.
குறிப்பாக உலக சுகாதார அமைப்பின் வைரஸ் பாதிப்பின் தொடக்கப்புள்ளியான சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.
உலக சுகாதர அமைப்பானது உலக நாடுகளின் நிதி மூலம் இயங்கிவரும் அமைப்பாகும். அந்த அமைப்பிற்கு அதிகம் நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா திகழ்ந்துவரும் நிலையில், தற்போது அந்த அமைப்பிற்கு இனி நிதி கிடையாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.